ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி
ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி
எங்களைப்பற்றி

மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி நிர்வாகத்தை அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சிறப்பாக நடத்திவருகின்றது.  இந்த அறக்கட்டளை முழுக்க முழுக்க ஞானத்தையே கருப்பொருளாகக் கொண்டு வெளிவரும் மாத இதழ் ஒன்றை மறைஞானப்பேழை என்ற பெயரில் வெளியிடச் செய்துள்ளார்கள்.  (மறைஞானப்பேழை ஆன்லைன்:  www.emsabai.com)


மாணவர் சேர்க்கைக்கு தாங்கள் தொடர்புகொள்ள வேண்டிய:

மின்னஞ்சல்:  jamiayaseen@gmail.com 
தொலைபேசி  எண்:  +91-9952689099 ,  8344416665

அறக்கட்டளை சேவைகள்

  • ஆண்டுதோறும் புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாதுவிழாவை ரபீஉல் அவ்வல் மாதம் 30 நாட்கள் கொண்டாடி கடைசி தினத்தன்று ஏழைகளுக்கு கந்தூரி அன்னதானம் வழங்கியும், மனித நேய மத நல்லிணக்கவிழாவாகக் கொண்டாடி மக்கள் ஒற்றுமையாக வாழ பாடுபட்டு வருகிறது. ஏழை எளிய பெண்களுக்கு திருமணத்திற்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.
  • ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
  • வயதான ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கி வருவதுடன் அவ்வப்போது மருத்துவ முகாம் நடத்தி வருகிறது.
  • கோடை விடுமுறையில் பொதுவான மாணவர்களுக்கு இலவசக் கணினிப்பயிற்சி, குர்ஆன் ஓதக் கற்பித்தல், தீனிய்யாத் - மார்க்க கல்வி கற்பித்தல், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளித்துவருகிறது.
  • இயற்கை சீற்றத்தின் போது பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றது. 
  • மாதந்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள், சுற்றுப்புறத் தூய்மை, தீண்டாமை, வரதட்சணை ஒழிப்பு, தேசியஒற்றுமை, வருமுன் காப்போம் ஆகியவைகள் பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறது.

நன்கொடை வழங்குவோர்

இந்தியநாட்டு குடி உருமை உள்ளவர்கள் நன்கொடை வழங்கலாம்.   நன்கொடை வழங்குவோர் கீழ்காணும் முகவரிக்கு,  "Madhrasatul Hasanain Fi Jamia Yaseenஎன்ற பெயரில் local cheque, draft, money order, postal order அனுப்பி வைக்கலாம்.


மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி

சீத்தப்பட்டி பிரிவு,  பூலாங்குளத்துப்பட்டி அஞ்சல்,

திருச்சி - திண்டுக்கல் பிரதான சாலை,
(ஜே - ஜே. பொறியியல் கல்லூரி அருகில் )
திருச்சிராப்பள்ளி

போன்+91- 9952689099 ,  8344416665


வேறு வகையில் நன்கொடை வழங்க,  jamiayaseen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்